Wednesday, October 24, 2012

பெண்ணே உன் கண்ணினை பார்த்து
கன்னங்களை கைகளால் கோதி
உன் மனம் பொங்கிட காதல் சொல்ல எண்ணினேன்
தொலைந்தது சின்ன சின்ன சினுங்கள்கள்
தொலைதூர நம் வாழ்கையில்

Saturday, October 20, 2012

உன்னை பார்த்து 
சிரிக்கும் உதடுகளை விட
உன்னை காணாத நேரம் 
அழும் கண்களை நேசி
என் தனிமை கூட
இனிமையாக இருக்கிறது
உன் நினைவுகள்
என்னை சுற்றுவதால்


என்னொருத்தி கணவனை
தட்டி பறிக்கும் பொய்யான
காதல்
சினிமா காதல்

அழகிய இயற்கை 
அன்பான உறவு
ஒருவர் முகம்
ஒருவர் பார்த்தபடி
என்ன பேசுகின்றோம்
என்று கூட தெரியாமல்
கண் மொழி மூலம்
பேசுகின்றோம் நம்
காதலை

உன் உடன் இருக்கும் போது 
அழகாக தெரிந்த மழை
இன்று தனிமையில் 
இருக்கும் போது 
என்னை வதைக்கும் 
மழையாக தெரிகிறது

எங்கு சென்றாலும்
என் மனம்
உன்னை நினைத்து
கொண்டு இருக்கிறது