Sunday, September 30, 2012

கண்ணாடியில் வீசிய
கல்லாய்
உன் பார்வைகள்,
என்னுள் சிதறிக்கிடந்தாலும்
ஒவ்வொன்றிலும் வித விதமாய்
தெரிகிறாய்
நீ
காதலோடு...

நினைவில் நினைத்து
கனவில் வருவதல்ல
காதல்
மனதில் நினைத்து
கல்லறைவரை செல்வது
தான் உண்மை காதல் 


காதல்

காதல் என்னும் அழகிய
காற்றை சுவாசிக்கிறேன்
என்னை சுற்றி எல்லாமே
சந்தோஷமாக இருக்கிறது
ஆனாலும் என் காதலன்
அருகில் இருந்தால்
பட்டாம்பூச்சி கூட
என்னை சுற்றி செல்லும்
என் காதலின் அன்பை உணர்ந்து 


என் மனசை
ஒரு நொடியில்
கொள்ளை கொண்டவனே
என் இதயத்தை உனக்கு
சொந்தம் ஆக்கியவனே
உன் ஓடு சேரும் நாள்
நம் காதல் காவியத்தின்
இன்ப நாள்

கண் ஓடு கண் பார்க்காமல்
மனசை மட்டும்
இடம் மாற்றி
உயிராக நேசிக்கிறேன்
என் காதலை .........

நீயின்றி நானில்லை
என்பதல்ல காதல்…
எது இல்லையென்றாலும்
நான் இருக்கிறேன்
என்பதுதான் காதல்!!!!!!!!!!!!!

நிஜமான நினைவுகள்
நிழலாக மறைவதில்லை
நிழலாக மறையும் நினைவுகள்
நிஜமான நினைவுகள் இல்லை..